முல்லைத்தீவில் பாரியளவிலான வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 13 பெரிய பராக்களும் ஒரு சிறிய பராவும் 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள், 49  60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும், 6 ஆர் வி ஜி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 56 கைகுண்டுகளும் ஒரு தொகை தோட்டாக்கள் என பெருமளவிலான வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை முல்லைத்தீவில் அண்மையில் பாரிய மனித புதைக் குழியும் கண்டுபிடிக்கப்ட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இறுதி யுத்தம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற காலம் முதல் பல்வேறு பகுதிகளிலும் மனித எச்சங்களும் வெடி பொருட்களும் மீட்கப்படுவதோடு, விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்டும் தங்கங்களையும் தேடி அகழ்வு நடவடிக்கைகளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply