யாழ் இளவாலை பகுதியில் கத்திக் குத்து – இளம் குடும்பஸ்தர் பலி

யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்ததாகவும், முரண்பாடு முற்றியதன் காரணமாக கத்திக்குத்தும் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர், பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியைச் சேர்ந்த, 35 வயதுடைய  ராமச்சந்திரன் ராஜ்குமார் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

சம்பவத்தையடுத்து, தாக்குதல் மேற்கோண்ட நபர்கள் இருவரையும் இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply