மாணவர்களின் வட்டியில்லாத கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகள் முழுமையான கடன் காலப்பகுதிக்கான 13% வீத குறைந்த வட்டி வீதத்தைப் பேணி இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களில் பொருத்தமான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களுக்கு இக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ் 07 ஆவது அணியின் கீழ் வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply