புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும்,  ஏறக்குறைய 100 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும்  லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அறிவிக்கப்படாத இந்த புள்ளிவிவரங்களுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன என டொக்டர் பெரேரா தெரிவித்தார்.

நமது குழந்தைகளைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவதும், துரித உணவுகளைத் தவிர்ப்பதும் மற்றும் உடல் செயற்பாடுகளை அதிகரிப்பதும் முக்கியமாகும் என அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply