பொலிஸாரால் தாக்கப்பட்ட மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்!

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமித திஸாநாயக்க, கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப முரண்பாடு தொடர்பில் முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு முறைப்பாடு பதிவதற்காக அலுவலர்கள் இன்றி அதிக நேரமாக தன்னை காத்திருக்க வைத்ததாகவும் இது குறித்து தான் இருமுறை நினைவூட்டியதாகவும் சமித திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, பொலிஸ் நிலைய உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த பின்னரே, தன்னை முறைப்பாட்டைப் பதிவு செய்ய அழைத்ததுடன் தன்னுடன் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இணைந்து தன்மீது தாக்குதல் தொடுத்ததாகவும் சமித திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply