முச்சக்கர வண்டிகளுக்கான அலங்காரம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கையில், முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அலங்காரங்களை 30 வகைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலதிக தகவல்களை இணையத்தளத்திலோ, முச்சக்கரவண்டி ஒதுக்கீட்டுக் கிளையிலோ  அல்லது 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டோ பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply