மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முன்னிலையில் இந்தியா!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 150 ஓட்டங்களை பெற்று சகல இலக்குகளையும் இழந்தது.

மேற்கிந்திய அணி சார்பில் ஆலிக் அதானஸ் 47 ஓட்டங்களை அணிக்காக பெற்று கொடுத்திருந்தார்.

இந்தியா சார்பில் அஸ்வின் 5 இலக்குகளையும், ஜடேஜா 3 இலக்குகளையும், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு இலக்குகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடினர். முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஜெய்ஸ்வால் 40 ஓட்டமும், ரோகித் சர்மா 30 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply