பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை

விவசாயிகளின் உற்பத்திகளை வாங்க மறுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான குத்தகை உரிமப் பத்திரத்தை இரத்து செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக .விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் இடைத்தரகர்களினூடாக விவசாய உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதால்,  அதிக இலாபத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

இதனால் விவசாயிகளும் நுகர்வோரும் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, பொருளாதார மத்திய நிலையங்களில் இடைத்தரகர்களிடமிருந்து விவசாய உற்பத்திப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்களின் வர்த்தக நிலையத்துக்கான குத்தகை உரிமப்பத்திரங்களை இரத்துச்செய்யவும், ஏனைய வர்த்தக முயற்சியாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply