கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் சொத்தல்ல – அமைச்சர் பகிரங்கம்!

கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? என அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மட் கேள்வியெழுப்பியுள்ளார்.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம். ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனவும் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையிலேயே அமைச்சர் நஸீர் அஹ்மட் கிழக்கு மாகாண ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply