சினோபெக் – இலங்கை முதலீட்டுச் சபை இடையே ஒப்பந்தம் கைச்சாத்து 

சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக், இலங்கையில் சில்லறை எரிபொருள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

முன்னதாக, சினோபெக் இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும், மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்ய முடியும்.

சினோபெக் உரிமத்தைப் பெற்ற 45 நாட்களுக்குள் செயற்பாட்டைத் தொடங்க முடியும் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை முன்னதாக கூறியது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply