துனுமல சரத் சுட்டுக் கொலை

வரகாபொல, கலபிடமட, துனுமலவத்த பிரதேசத்தில் துனுமல சரத் எனப்படும் பாதாள உலக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்களினால் இன்று காலை கெப் வண்டியில் அவர் பயணித்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு, சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துனுமல சரத், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் குற்றவாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply