மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி – சுற்றிவளைத்த பொலிஸார்

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றினைப் பொலிஸார் சுற்றிவளைத்து, அதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்ஸ காலி வீதி பகுதியில் குறித்த மசாஜ் நிலையம் அமைந்திருந்தது.

நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த இடத்தில் வைத்து மூன்று பெண்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27, 41 மற்றும் 67 வயதுடையவர்கள் எனவும் பயாகல, நொச்சியாகம மற்றும் கடுவலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பெண்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply