இளம் குடும்பப் பெண் தற்கொலை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண், கடந்த புதன்கிழமை மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மினேஸ் சங்கீதா என்னும் 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குடும்பத் தகராறு காரணமாக அரலி விதையை அரைத்துக் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் சடலம்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply