இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி – முதலாவது போட்டியிலேயே ஆட்ட நாயகன் ஆனார் ஜெய்ஷ்வால்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது

அதன்படி, போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 150 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 5 இலக்குகளை வீழ்த்தினார்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 5 இலக்குகளை இழந்து 421 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்திய அணி சார்பில், துடுப்பாட்டத்தில், தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய யஷஷ்வி ஜெய்ஷ்வால், 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன், அணித்தலைவர் ரோஹிட் சர்மா, 103 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 130 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து தோல்வியடைந்தது.

பந்துவீச்சில், ரவிச்சந்திரன் அஸ்வின், அதிகபட்சமாக 7 இலக்குகளை வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக, யஷஷ்வி ஜெய்ஷ்வால் தெரிவானார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply