தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய யாழ்ப்பாண குடும்பங்கள்!

யாழ்ப்பாணத்தில்  இருந்து சென்ற எட்டுப்பேர் தமிழ்நாட்டின்  தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்கள் எட்டுப்பேரும் இன்று அதிகாலையில் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இங்குள்ள ஈழத்தமிழர்கள் வாழ வழி இன்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின்  இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி  கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து  படகு மூலம் சென்ற எட்டு பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

தமிழக பொலிசாருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார் எட்டு ஈழத் தமிழர்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு தமிழகம் சென்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த  எட்டு பேரில் இரு பெண்களும், இரு ஆண்களும் 4 சிறுவர்களும்  விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தினரும் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் மற்றும் ஆணைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply