போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரிடமிருந்தும் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காக்கைக்தீவு பகுதியைச் சேர்ந்த இருவர், புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த இருவர் என 20 முதல் 30 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர்கள் கோப்பாய் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply