பிரமிட் திட்ட பண வைப்பு விவகாரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட நபர்!

இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த  சம்பவத்தில் 37 வயதுடைய  நுவன் பிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்  மனைவியின் சகோதரியின் கணவராலேயே தடியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரமிட் திட்டத்தில் 20 இலட்சம் ரூபாவை வைப்பிலிடப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே உயிரிழந்த நபர் அடித்து படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் தூண்டுதலின் பேரில் சந்தேக நபரான உறவினர்  பணத்தை பெற்றுக் கொள்ள முடியாது போனதாகவும் அதனால் மனஅழுத்தத்தில்  இருந்துள்ளமையுமே கொலைக்கான காரணம் என  பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply