யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதான புஷ்பராஜ் எஷில்நாத் என்பவரே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தனது கைத்தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவதற்கு அடிமையாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply