சிங்கப்பூர் பயணமாகிறது அமைச்சரவையின் விசேட குழு!

இலங்கை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு இன்று திங்கட்கிழமை சிங்கப்பூர் பயணமாகின்றது.

குறித்த கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply