இனிவரும் காலங்களில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது இருக்கின்ற கோதுமை மா  இரண்டு வார காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கின்ற நிலையில் கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரச்சினை குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும் கோதுமை மா இறக்குமதி தொடர்பில் இதுவரை  எவ்வித  இறுதித் தீர்மானமும்  எடுக்க முன்வரவில்லை என சங்கத்தின்  சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply