‘ரீ கடை’ கூட நடத்த முடியாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆளமுடியும் – மஹிந்தானந்த கேள்வி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் அநுரகுமாரவிற்கு ஐந்தாண்டுகள் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர்கள் அதனை பாதியிலேயே கைவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.முகநூலிற்கு மட்டுமே ஜனாதிபதி என்றும் ஒரு டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆள முடியும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply