இணையவழி கடவுசீட்டு – ஒரு மாதத்தில் 30,000 விண்ணப்பங்கள்!

ஒரு மாத காலத்திற்குள் இணையவழி ஊடான கடவுச்சீட்டிற்கு கிட்டத்தட்ட 30,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், ஜூன் 15 முதல் ஜூலை 15 வரையான 30 நாட்களில் 29,578 பேர் இவ்வாறு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், ஒரு நாள் சேவைக்காக 5,294 பேரும், பொது சேவைக்காக 24,285 பேரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply