பென்சில்வேனியாவில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – ஐவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரெனப் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில், நேற்று ஒரு மணி நேரத்தில் 175 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்ததால் வீதியில் 5 அடி உயரம் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் அவ்வழியால் பயணித்த 11 கார்கள் சிக்கிக்கொண்டன.

இதுவரையில், வெள்ளத்தில் சிக்கி இறந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 2 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தில் சிக்கிய ஏனையோரைத் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply