சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி – மக்கள் வெளியேற்றம்

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த  சூறாவளி தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு சீனாவை தாக்கிய குறித்த சூறாவளி ”தாலிம் புயல்” எனும் பெயரால் அழைக்கப்படுகின்றது.

சூறாவளியின் காரணமாக, ஏறக்குறைய 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர்  பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சூறாவளித் தாக்கத்தையடுத்து, விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று சூறாவளியின் வேகம் குறைவடைந்து வியட்நாமை நோக்கி நகரும் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வியட்நாமின் பல மாகாணங்களில் இருந்தும் சுமார் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply