திடீரென பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து – ஸ்தலத்தில் நபர் பலி!

வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென பள்ளத்திற்குள் பாய்ந்தமையாலேயே விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த 6 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply