தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவி – பெற்றோரிடம் தீவிர விசாரணை!

பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஆர்.சுசந்திகா என்ற மாணவியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்டு, வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், மாணவியின் பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply