அடுத்த ஜனாதிபதி யார்? சூடுபிடிக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றன.

இந்த நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த கட்சிகளும் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களை வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நிறுத்துவதற்கு பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சுதந்திர ஜனதா சபை தனக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஊழலற்றவர், அவர் நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமானவர் எனவும், எனவே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply