கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஒன்றுகூடிய சிவில் செயற்பாட்டாளர்கள்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்களால் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த சத்தியாகிரக போராட்டம் இன்றையதினம் கொழும்பு – சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்று வருகிறது.

நாட்டிலுள்ள அரச மருத்துவமனைகளில் தரமற்ற மருந்து பொருட்களின் பாவனையால் மர்மமான முறையில் பல மரணங்கள் ஏற்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையின் கவன குறைவான போக்கினாலேயே இவ்வாறான உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் எடுத்துக்காட்டி சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply