தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரட்ணம் ஆகிய இருவருக்குமே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறி 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வெடிப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டு சண்முகரட்ணம் சண்முகராஜன் ஆகியோரே இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட இருவரும் இன்று மாலை சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்ததாககவும் தெரிவிக்கப்படுகிறது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply