எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற அங்கீகாரம் – ஆரம்பமாகியது அமர்வு! நேரலை

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

குழுநிலை விவாதத்தின் பின்னர் ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு முன்னர் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலத்தில் திருத்தங்களை உள்ளடக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையிலேயே ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுதல் மற்றும் பாதுகாத்தல் சட்டமூலத்தின் குழுநிலை விவாதமும் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply