மீண்டும் தலை தூக்கும் தீவிரவாத இயக்கம் – எச்சரிக்கை விடுத்தது பிரித்தானியா

அல்கொய்தா ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாக பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவ் மேன், பிரித்தானியா இப்போது உள்நாட்டு தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கணிப்பதற்கு சாத்தியப்பாடுகள் குறைவாகவும் புலனாய்வு செய்து விசாரணைகளை நடத்த கடுமையாகவும் இத்தீவிரவாதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது போல இப்போது இல்லை என்ற போதும் மீண்டும் அல்கொய்தா ஐஎஸ் போன்ற இயக்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக சுவெல்லா பிரேவ்மேன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply