மலையகத்தில் அமைக்கப்படப்போகும் பல்கலைக்கழகம்!

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் , அமைச்சர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்துடன் இணைந்து மலையகத்துக்காக பல வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த செயற்பாடு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொட்டகலை பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும் அதேவேளை எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply