மதத் தலங்களுக்கான எல்லை அளவீடுகளுக்குத் தயாராகும் அரசாங்கம்!

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களுக்கான அளவீடுகளைத் தயாரிக்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்கர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மதஸ்தலங்கள் பதிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply