சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி கைது

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா இஹலகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது சந்தேகநபர் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் இலங்கையின் தண்டனை பெற்ற குற்றவாளிகள்  பட்டியலில் உள்ளவர் என்றும், சிறையிலிருந்து தப்பிச் சென்ற அவர் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply