நீர்கொழும்பு தடாகத்தில் பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு தடாகத்தில் 557 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினரால், நேற்று நீர்கொழும்பு தடாகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 557 கிலோகிராம் எடையுள்ள கடத்தப்பட்ட பீடி இலைகள் ஏற்றப்பட்ட 2 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர்,  களனி கப்பல் நீர்கொழும்பு தடாகத்தின் துவா பகுதியில் வைத்து இந்த 2 டிங்கி படகுகளை கைப்பற்றினர்.

டிங்கி படகுகளை சோதனை செய்த கடற்படையினர், 557 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் அடைக்கப்பட்டிருந்த 19 சாக்குகளை மீட்டதாக  தெரிவித்தனர்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் 2 டிங்கி படகுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்கவிலுள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply