நாட்டில் 24 மணித்தியாலங்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 53700 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 36 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் 26702 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள வைத்திய பிரிவுகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply