தரமற்ற மருந்துகள் – எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கெஹலிய!

நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லும் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப மாட்டார்கள் அதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் அமைக்கப்படுகிறது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், சர்ச்சைக்குரிய மருந்து விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த 21 வயது யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகின்றது எனவும், குறித்த தடுப்பூசி போடப்பட்ட மேலும் 12 பேர், அப்போது யுவதி இருந்த விடுதி அறையில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply