மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக கஞ்சன வெளியிட்ட தகவல்!

அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான குறித்த கலந்துரையாடல் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.

மேலும், பராமரிப்பு அட்டவணைகள், மின் தடைகள், நீர்மின் திறன் மற்றும் புதிய போக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமையம் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply