யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – மாத்தறை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் நேற்று (19) அடையாளம் காணப்ட்டுள்ளது.

பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தையொட்டியதாக ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை பருத்தித்துறை பொலிஸாரால் மீட்க்கப்பட்டது.

இந்நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கிரிசாந்த பொன்னுத்துரை சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்துது.

சம்பவம் தொடர்பில் பருதித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை (19) காலை உறவினர்கள் வருகைதந்து குறித்த சடலத்தை அடையாளம் காட்டி சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையைச் சேர்ந்த சுஜீவ அபயவர்த்தன விக்கிரமசிங்க (வயது-55) என்பவர் என தெரிய வந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply