கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

கொழும்பின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று முற்பகல் 8.30 முதல் நாளை முற்பகல் 8.30 வரையில் குறித்த பகுதிகளில் ஆர்பாட்டங்களை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply