பொலிஸாரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு!

முல்லைத்தீவில் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குருந்தூர்மலையில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பில் செய்தி கேசகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் இலங்கை பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.

இது தொடர்பிலேயே, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நேற்று முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் கடந்த14ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின்போது ,  அங்கு செய்தி சேகரிப்பிற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரின் அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில் கடந்த 17.07.2023 அன்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் ஊடகவியலாளர் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply