பூநகரி மதுபானசாலைக்கு நிரந்தர தடை!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை, ஆலயம், ஆசிரியர் விடுதி மற்றும் பொது விளையாட்டு மைதானம் போன்றவை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மதுபானசாலை தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் இன்று வரை மதுபான சாலையை திறப்பதற்கான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மதுபானசாலையைத் திறப்பதற்கான நிரந்தர தடையுத்தரவை பிறப்பித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply