தமிழர்களுக்கான தீர்வினை வழங்காவிட்டால் ரணில் வீட்டிற்கு செல்ல நேரிடும் – சாணக்கியன் எச்சரிக்கை!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதிக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புவதாகவும், நாடு ஜனாதிபதிக்குச் சொந்தமானதோ, அல்லது ஒரு இன மக்களுக்கு மட்டுமே சொந்தமானதோ அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அரசியல் உரிமை என்பது தமிழ் மக்களுக்கும் உரித்தான விடயமாகும். தான் விரும்பியதைத் தான் தருவேன் என ஜனாதிபதி கூறுவாராக இருந்தால் விரைவில் நீங்களும் நிராகரிக்கப்படுவீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நீங்களும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என ரணளிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போடும் பிச்சையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதையும் ஜனாதிபதி நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறாமல் அவர்களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கான சிறந்த இடத்தினை வழங்காவிட்டால் இந்த நாடு ஒரு சிறந்த இடத்திற்கு வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரைக்கும் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என ஜனாதிபதி நினைக்கக் கூடாது என கூறியுள்ளார்.

அவ்வாறு தமிழர்களை ஏமாற்ற ஜனாதிபதி நினைப்பாராக இருந்தால் அவரும் விரைவில் அழிந்து போவார் என்பதையே தாம் கூற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply