பதுரலிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – “ரோசா பட்டா“ கைது

பதுரலிய, லத்பந்துர பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மிதலான பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்,அவர் முதலில் பதுரலிய பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட போதிலும், அவரது நிலை மோசமடைந்ததால் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

லத்பந்துர பிரதேசத்தில் வசிக்கும் ‘ரோசா பட்டா’ என்ற மாற்றுப்பெயர் கொண்ட குற்றவாளி, 12 போர் துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply