மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக  தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி தற்போது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

நேற்று மாலை  இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி ரணிலை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை ஸ்தாபித்ததன் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களையும் சந்திக்க உள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply