ஆட்சியை கைப்பற்றும் வரை போராட்டம் தொடரும் – ஜே.வி.பி சூளுரை!

நாட்டு மக்களின் பிரச்சினை தீர வேண்டுமானால் தாம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என ஜே.வி.பி தெரதிவித்துள்ளது.

அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தாம் பல வழிகளில் போராடுவோம் எனவும், ஆட்சியைப் பிடிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி சூளுரைத்துள்ளார்.

மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீரவில்லை எனவும், அதிகாரம் உள்ள வர்க்கம் அதிகாரம் அற்ற வர்க்கத்தை நிர்வகித்துக் கொண்டு செல்கின்றதுஎனவும்,  மக்களை கஷ்டத்தில் தள்ளியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ்வதற்காகப் போராடுகின்றார்கள். அவர்களை நாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டு இல்லாததால், எரிபொருளுக்கான வரிசை இல்லாததால் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என்று சிலர் நினைக்கின்றார்கள்.

ஆனால், உண்மையில் பிரச்சினை தீரவில்லை. பிரச்சினை தீர்ந்தால் மக்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply