இந்திய விஜயத்தை முடித்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி கடந்த 2022 இல் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 17 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் விக்ரமசிங்கே கடந்த வியாழக்கிழமை புதுடெல்லிக்குப் புறப்பட்டார்.

இரு நாடுகளும் இந்த ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

தனது பயணத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் கெளதம் அதானி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உட்பட பல உயர்மட்ட இந்தியப் பிரமுகர்களுடன் புதுடெல்லியில் இருதரப்பு விவகாரங்களில் ஈடுபட்டார்.

கடந்த வருடத்தில், பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு புதுடெல்லி வழங்கிய நீண்டகால ஆதரவு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்புக்கான சான்றாகும் என இந்திய ஜனாதிபதி ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் கூட்டாண்மை நீடித்தமையானது இரு நாடுகளின் சாமானிய மக்களுக்கும், பெரிய இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் நன்மை பயக்கும் எனவும், ஜனாதிபதி விக்ரமசிங்கேவின் தலைமையில் இலங்கையுடனான தனது வளர்ச்சிப் பங்காளியைத் தொடரவும் வலுப்படுத்தவும் இந்தியா எதிர்நோக்குகிறது எனவும் ஜனாதிபதி முர்மு தெரிவித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிரதமர் மோடியிடம் கூட்டறிக்கை ஒன்றை வழங்கிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, சமீபகால வரலாற்றில் இலங்கையின் மிகவும் கடினமான காலங்களில் தொடர்ந்து ஆதரவளித்த இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஏற்பட்டுள்ள ஈர்க்கக்கூடிய பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையில், 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு கண்ணியமானதும் மரியாதையுமானதுமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் பிரதமர் மோடி, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக 75 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக மோடி அறிவித்தார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் விஜயத்தின் போது, இலங்கையும் இந்தியாவும் இலங்கையின் பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை ஏற்றுக்கொண்டன. இந்த பார்வை இரு நாட்டு மக்களுக்கும் இடையே கடல், வான், எரிசக்தி மற்றும் மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாகும். சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்த ஆவணத்தில் இடம்பெற்றிருந்தன. இதுவே இலங்கைக்கான இந்தியாவின் நீண்ட கால அர்ப்பணிப்பின் தொலைநோக்குப் பார்வையாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த நோக்கத்திற்காக, இலங்கைக்கு மலிவு மற்றும் நம்பகமான ஆற்றல் வளங்களை வழங்குவதை உறுதி செய்யும் முயற்சியில், இந்தியாவின் தென் பகுதியில் இருந்து இலங்கைக்கு பல தயாரிப்பு பெற்றோலிய குழாய்களை நிறுவுவதற்கு இரு தரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன.

இதன்படி, இலங்கையின் மேல்நிலை பெற்றோலியத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இலங்கையின் கடலோரப் படுகைகளில் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட கூட்டு ஆய்வு மற்றும் ஹைட்ரோகார்பன் உற்பத்தியை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையில் காங்கேசன்துறைக்கும், இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் மற்றும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிற இடங்களுக்கும் இடையே பயணிகள் படகுச் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் கைத்தொழில், ஆற்றல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் தேசிய மற்றும் பிராந்திய மையமாக திருகோணமலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இரு ஜனாதிபதிகளும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், இலங்கையும் இந்தியாவும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம்,  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒத்துழைப்பு, திருகோணமலை மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு, இலங்கையில் சம்பூர் மின்சக்திக்கான ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத் திட்டம், மற்றும் சூரிய சக்தி அனுமதிக்கான ஐந்து முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும், இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி முன்னிலையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply