கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் – பவித்ரா வன்னியாராச்சி

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னைய அமைச்சின் கீழ் நடாத்தப்படும் நிறுவனத்தில் பணியாற்றும் கால்நடை வைத்தியர்களின் பிரச்சனைகளை ஆராய்வதற்காக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது காணப்படும் பதவி தொடர்பான பிரச்சினை, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த சிக்கல்கள் கால்நடை வைத்திய அலுவலர்களினால் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், கடமையின் தன்மை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply