யாழில் முக்கிய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்!

யாழ் துன்னாலை பகுதியில் ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply