நாட்டில் அதிகரித்த வீதி விபத்துக்கள் – பொலிஸ் தலைமையக அறிக்கை

கடந்த மூன்று வருடங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து நூற்று எழுபத்தி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த மூன்று ஆண்டுகளில் 67 ஆயிரத்து 687 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் 2 ஆயிரத்து 515 பேரும், 2021 இல் 2 ஆயிரத்து 513 பேரும்,  2020 இல் 2 ஆயிரத்து 144 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் சமீபத்திய வருடாந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 40 அபாயகரமான வீதி விபத்துகளும், 2021 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 414 அபாயகரமான வீதி விபத்துகளும், 2022 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 395 ஆபத்தான வீதி விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply